Doctor Aadil, who received a salary of Rs. 5 lakh, turned into a terrorist.

புதுடெல்லி: ​காஷ்மீர் புல்​வாமா மாவட்​டம் குல்​காமின் காஜிகுண்ட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மருத்​து​வர் ஆதில் அகமது. இவர், உ.பி. சஹாரன்​பூரில் பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​னார். தீவிர​வாத சதி தொடர்​பான சந்​தேகத்​தின் பேரில், காஷ்மீர் போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி சஹாரன்​பூருக்கு வந்து ஆதிலை கைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் காஷ்மீர் அனந்​த​நாக் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3 ஆண்​டு​கள் பட்​டமேற்​படிப்பு படித்​தது தெரிய வந்​தது.

மருத்​து​வ​மனை​யில் காலி செய்​யாமல் வைத்​திருந்த ஆதில் லாக்​கரிலும் சோதனை நடத்​தப்​பட்​டது. அதில், ஏகே 47 துப்​பாக்கி உள்​ளிட்ட சில சட்​ட​விரோத பொருட்​கள் சிக்​கின. சஹாரன்​பூர் மருத்​து​வ​மனை​யில் ஆதில் ரூ.5 லட்​சம் மாத ஊதி​யம் பெற்​றுள்​ளார். கடந்த அக்​டோபர் 4-ம் தேதி ஆதி​லுக்கு திரு​மணம் நடந்​துள்​ளது. அப்​போது குறிப்​பிட்ட சிலரை மட்​டுமே அவர் திரு​மணத்​துக்கு அழைத்​துள்​ளார். அவர்​களில் முக்​கிய​மானவ​ராக கருதப்​படும் மருத்​து​வர் பாபர் அகமது​விட​மும் போலீ​ஸார் தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Ammonium nitrate used in the Delhi car bomb attack

Chennai | Man arrested for cheating people by luring them with promises of foreign jobs