சென்னை: அஜர்பைஜான் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (30). இவர், வெளிநாட்டில் பணி செய்ய வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது, வெளிநாட்டு வேலை தொடர்பாக, சமூக வலைதளத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
போலி விசா, பணியாணை எதிர் முனையில் பேசிய நபர், தான் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த சுடலை குமார் (38) என்றும், தன்னால் அஜர்பைஜான் நாட்டில் வேலை வாங்கித் தர முடியும் எனவும் கூறி, சேவை கட்டணமாக ரூ.1.5 லட்சம் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, அந்நாட்டுக்குச் செல்ல தேவையான விசா மற்றும் வேலைக்கான ஆணைகளை கொடுத்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.


