சென்னை: ஆந்திராவில் வழங்குவதைப் போல, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் தலைமை வகித்தனர். 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் குறித்து மாநில தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் கூறியது: “ஆந்திராவில் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.6,000 முதல் ரூ,10,000 வரை வழங்கப்படுகிறது. கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.15,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.

