புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை தலைப்பாகை அணிவதில் 2 பூசாரிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்பவத்தில் ரிம்முக்தேஷ்வர் கோயில் தலைவர் மகாவீர் நாத், தனது சக துறவி சங்கர் நாத்துடன் பூஜை செய்ய கருவறைக்கு வந்தார். அப்போது மகாவீர் நாத் பாரம்பரிய தலைப்பாகை அணிந்திருந்தார். அதைப் பார்த்த அங்கிருந்த பூசாரி மகேஷ் சர்மா, தலைப்பாகையை அகற்றும்படி தெரிவித்தார். மகாகாலேஷ்வருக்கு முன்பு தலைப்பாகை அணிவது கோயில் மரபுக்கு எதிரானது என்று கூறினார். இதற்கு மகாவீர் நாத் மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Click the link above to read the full article on the original website.


