ஓசூர்: தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான பெண்ணின் ஆண் நண்பர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்ற பெண் தொழிலாளி ரகசியகேமரா பொருத்தியது தெரியவந்தது. பின்னர் நீலுகுமாரியை போலீஸார் கைது செய்தனர். அவரது ஆண் நண்பரான, பெங்களூருவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த ரவி பிரதாப்சிங் என்பவர் கேமராவைப் பொருத்தச் சொன்னது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.


