ஜூலை 4, 2019. 10-வது உலகத் தமிழ் மாநாட்டு அரங்கம். 25-க்கும் மேற்பட்ட நரம்பு வாத்தியக் கருவிகள். காற்று வாத்தியக் கருவிகள். மேற்குலக டிம்பனி, டிரம்ஸ், தமிழ்நாட்டின் பாரம்பரிய வாத்தியக் கருவியான பறை உள்ளிட்ட தாள வாத்தியங்கள் புடைசூழ, ஒவ்வொரு வாத்தியத்தில் இருந்தும் பன்னீராய் இசைத் தூறல்கள் அங்கே குழுமியிருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் காதுகளில் தேன் பாய்ச்சியது.
முகப்பு இசை முடிந்ததும், தமிழை ஆண்ட ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் உள்ள பாடலான ‘கற்பூரம் நாறுமோ’ என்னும் பாடலை விதிதா கன்னிக்ஸ், கீரவாணி ராகத்தின் ஏற்ற இறக்கத்துடன் பாடி முடிக்க, அர்த்தம் பொதிந்த பாடலின் வார்த்தைகளிலும் உருக்கத்திலும் மெய் மறந்துபோன ரசிகர் கூட்டம் சில நொடிகள் அமைதிக்குப் பின், எழுந்து நின்று ஆரவாரிக்கிறது.
Click the link above to read the full article on the original website.


