பனையூருக்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? – விஜய்யை கிண்டலடிக்கும் சீமான்

English

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பனையூரில் வைத்து, அங்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: என்னை எதிர்ப்பவர் எல்லாம் என் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என் எதிரி. என் நண்பனாக இருக்க ஒரு தகுதியும் தேவையில்லை. ஆனால் எதிரியாக இருக்க நிறைய தகுதிகள் வேண்டும். அந்த வகையில் நான் தவெக தலைவர் விஜய்யை எதிர்க்கவில்லை. சில கேள்விகளை மட்டுமே முன்வைத்தோம். ஆனால் நாங்கள் விஜயைவிமர்சிப்பதாகவும்,

எதிர்ப்பதாகவும் கூறுகின்றனர். அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. அரசியல் களத்துக்கு வந்தால் கேள்விகேட்கப்படும். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பனையூரில் வைத்து, அங்கு வந்து ஓட்டு போடுங்கள் என்று சொல்வாரா? பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு ஆலமரத்துக்கு வருவார். ஆனால் பனையூர்க்காரர் தன் வீட்டில் மட்டுமே தான் பஞ்சாயத்து நடத்துவேன், ஆலமரத்துக்கு வர மாட்டேன் என மறுக்கிறார்.


Tamil

பனையூருக்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? – விஜய்யை கிண்டலடிக்கும் சீமான்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பனையூரில் வைத்து, அங்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: என்னை எதிர்ப்பவர் எல்லாம் என் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என் எதிரி. என் நண்பனாக இருக்க ஒரு தகுதியும் தேவையில்லை. ஆனால் எதிரியாக இருக்க நிறைய தகுதிகள் வேண்டும். அந்த வகையில் நான் தவெக தலைவர் விஜய்யை எதிர்க்கவில்லை. சில கேள்விகளை மட்டுமே முன்வைத்தோம். ஆனால் நாங்கள் விஜயைவிமர்சிப்பதாகவும், எதிர்ப்பதாகவும் கூறுகின்றனர். அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை.

அரசியல் களத்துக்கு வந்தால் கேள்விகேட்கப்படும். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பனையூரில் வைத்து, அங்கு வந்து ஓட்டு போடுங்கள் என்று சொல்வாரா? பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு ஆலமரத்துக்கு வருவார். ஆனால் பனையூர்க்காரர் தன் வீட்டில் மட்டுமே தான் பஞ்சாயத்து நடத்துவேன், ஆலமரத்துக்கு வர மாட்டேன் என மறுக்கிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கஞ்சா வழக்கில் இளைஞருக்கு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: போலீஸார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகளுக்கு தீர்வு – நயினார் நாகேந்திரன் உறுதி