10-year prison sentence given to youth in ganja case canceled: Court orders police to pay Rs. 10 lakh compensation.

மதுரை: கஞ்சா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட இளைஞருக்கு போலீ​ஸார் ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. கடந்த 2021 ஜூன் 26-ம் தேதி மதுரை திடீர் நகர் அங்​கன்​வாடி அருகே போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்போது, 24 கிலோ கஞ்சா கைப்​பற்​றிய​தாகக் கூறி 7 பேரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் விக்​னேஷ் என்​பவர் உட்பட 7 பேருக்கு தலா 10 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து மதுரை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் விக்​னேஷ் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனு நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. இரு தரப்பு வாதங்​களைக் கேட்ட நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்ப​தாவது: விக்​னேஷ் கஞ்சா வைத்​திருந்​ததற்​கான எந்த ஆதா​ரத்​தை​யும் போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​க​வில்​லை. எனவே, இந்த வழக்கு போலீ​ஸா​ரால் ஜோடிக்​கப்​பட்​டது என்​பது தெரிய வரு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The trainers for Vijay are members of AIADMK! – Former Minister Rajendra Balaji stirs up controversy..

Will he come to Panaiyur and tell people to vote? – Seeman mocks Vijay