Nainar Nagendran assures that demands will be resolved once the BJP alliance comes to power.

பாஜக சார்பில் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சியில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தினார்.

இதில், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர். மேலும், விசுவக்குடி அணை வாய்க்காலை சீரமைக்க வேண்டும். தண்ணீர் வரத்து வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும். செந்துறையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். வேப்பந்தட்டை வட்டம் எளையூர் கிராமத்தில் பொருளாதார சிறப்பு மண்டலம் அமைக்க வேண்டும். நரிக்குறவர்களுக்கு வழங்க வேண்டிய பட்டா நிலங்களை அளவீடு செய்து வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Will he come to Panaiyur and tell people to vote? – Seeman mocks Vijay

Central team members who studied the moisture content of paddy in Thanjavur, Trichy, and Pudukkottai districts