மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 72 வயது முதியவர் சேர்ந்து இளைஞர் போல ஆர்வமுடன் கல்வி பயின்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளையும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். பணி ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில், கல்வியின் மீது ஆர்வம் கொண்டு புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
Click the link above to read the full article on the original website.


