திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்ளை பாஜக செய்துவருகிறது. மேலும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து நிறுவனங்களையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையது தான்.
Click the link above to read the full article on the original website.


