சென்னை: “கரூர் சம்பவத்தில் யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்துக்கு முதன்மைக் காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்?. குற்றத்துக்கு காரணமானவரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்?. யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?. யாருடைய வருகையால் கூட்டம் கூடியது என்பது தான் கேள்வி? விஜய் வரவில்லை என்றால் அங்கு கூட்டம் கூடியிருக்குமா?. இவருக்கு இந்தச் சம்பவத்தில் பொறுப்பு இல்லையா?.
Click the link above to read the full article on the original website.


