மதுரை: “நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் அவர் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கு ஏற்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை மட்டுமல்ல தவெக-வையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கரூர் நெரிசல் சம்பவத்துக்கு முன்வரை விஜய் அதிமுகவையும், அதிமுக, விஜய்யையும் விமர்சித்து வந்தனர். தற்போது தவெக கட்சிக்கு பரிந்து அதிமுக பேசி வருகிறது. தவெக கொடிகள், அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரக் கூட்டத்தில் தென்படவே, கூட்டணி பிள்ளையார் சூழிபோட்டாச்சு என்று கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.
Click the link above to read the full article on the original website.


