சட்டப்பேரவையில், இந்த 2025-26-ம் நிதி ஆண்டுக்கு ரூ.2,914.99 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக பேரவையில் அவர் பேசியதாவது: நடப்பு (2025-26) நிதி ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,914.99 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள் மற்றும் புதிய துணைப் பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்டவற்றுக்கு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்
டுள்ள தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் இந்த துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.
Click the link above to read the full article on the original website.


