தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, நேற்று காலை அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களின் ஊர்வலத்தை எம்.பி. முரசொலி, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி ஊர்வலமாக பெரிய கோயில் வரை வந்தனர்.
Click the link above to read the full article on the original website.


