கோவை: போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அமைச்சர் நேரு, அவரின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


