மதுரை: ராமநாதபுரத்தில் படிக்கும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்னும் ஓராண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலே டிகிரி வாங்கி சென்றுவிடுவர். அதற்குள்ளாவது மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டித்தர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.50 லட்சத்திலான நவீன டெக்சாஸ் ஸ்கேன் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: ”கடந்த 2018-ல் டிசம்பர் 17-ம் தேதி 7 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பஞ்சாப், பிஹார், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கட்டி முடித்துவிட்டனர். தமிழகம் நீங்கலாக 6 மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியது.
Click the link above to read the full article on the original website.


