டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
அது சரி, இதையெல்லாம் கேப்டன் சூரியகுமார் யாதவ் தானே பேச வேண்டும். பயிற்சியாளர் கம்பீர் டீம் பேட்டிங் டவுன் ஆர்டர் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்?. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி ஷுப்மன் கில்லுடையது, டி20 சூரியகுமார் யாதவுடையது என்று அன்று வாய் கிழிய செய்தியாளர்களிடம் கூறிய கம்பீர் இப்போது டவுன் ஆர்டர் பற்றி கூறுவதைப் பார்த்தால் உள்ளுக்குள்ளிருந்து கேப்டன்சியையும் கம்பீர்தான் செய்கிறார் என்பது நிரூபணமாகிறது.
Click the link above to read the full article on the original website.


