மும்பை: மும்பை பொவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டூடியோ உள்ளது. இதனை ரோகித் ஆர்யா என்பவர் நிர்வகித்து வந்தார். தன்னை திரைப்பட இயக்குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார். இந்த
இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் அவர் அறிவித்தார்.
இணைய தொடருக்காக நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேர் ஆடிசனில் பங்கேற்க ரோகித் ஆர்யா அழைப்பு விடுத்தார். இதன்படி நேற்று காலை 17 சிறுவர், சிறுமியர் மும்பை பொவாய் பகுதியில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவுக்கு சென்றனர்.
Click the link above to read the full article on the original website.


