Priyanka Gandhi’s demand to control air pollution

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு தொடர்ந்து மோச​மாக உள்​ளது. டெல்​லி​யில் செயற்கை மழை பொழியச் செய்து காற்று மாசுவை கட்​டுப்​படுத்​தும் நடவடிக்​கை​யில் மாநில அரசு கடந்த வாரம் இறங்​கியது. ஆனால் காற்​றில் போதிய ஈரப்​ப​தம் இல்​லாத​தால் இந்த முயற்சி தோல்​வியடைந்​தது.

இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​.பி பிரி​யங்கா காந்தி எக்​ஸ்​ தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில், “டெல்லி முழு​வதும் சாம்பல் நிற துணியை போட்டு மூடியது போல் காற்று மாசு மிக மோச​மாக இருந்​தது. இது குறித்து நாம் அனை​வரும் அரசி​யல் பாகு​பாடின்றி ஆலோ​சிக்க வேண்​டும். காற்று மாசுவை கட்​டுப்​படுத்த மத்​திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த மோச​மான சூழலை போக்க எடுக்​கும் நடவடிக்​கைக்கு நாங்கள் ஒத்​துழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Call from Maoist leader to return to natural life

Violence is unacceptable: Election Commissioner’s statement