வாக்காளர் பட்டியல் தவறுதலாக வந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை ஆளும் கட்சியான திமுகவுக்கு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நவம்பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிஹாரில் இப்பணியை மேற்கொள்ளும் போது, லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி நேர்மையாக நடைபெற வேண்டும். அதேசமயம், டிசம்பர் 4-ம் தேதிக்குள் பல கோடி வாக்காளர்களின் அனைத்து தரவுகளையும் சரிபார்த்து எப்படி இந்த பட்டியல் தயாரிக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Click the link above to read the full article on the original website.


