சென்னை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனை பணிகள் நவ.1 முதல் தொடங்கி பல வகைப்பாடுகளில் அம்மாதம் இறுதிவரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு வரும் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டப்படி, கடந்த அக்.16-ம் தேதி மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனை நடத்த இருக்கிறது.
Click the link above to read the full article on the original website.


