சென்னை: தமிழக அரசு வழிகாட்டுதல்களை அறிவித்த பின்னர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை தொடங்கவும், அதற்கு முன்பு நவ. 5-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தவெக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவத்தால் முடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை கடந்த 27-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் தினசரிப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார். நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமை வகித்தார்.
Click the link above to read the full article on the original website.


