கரூர்: கரூர் மாவட்டம் ஜவஹர் பஜாரில் தரைக்கடை போட்டியிருந்த வியாபாரிகள் 30 பேரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை விடுவித்த போலீஸார், திருவள்ளுவர் மைதானத்தில் கடை போட்டுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஜவஹர் பஜார் தவிர பிற இடங்களில் தரைக்கடைகள் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து காவல் துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜவஹர் பஜார் தவிர பிற இடங்களில் தரைக்கடைகள் அமைத்துக் கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டு பதாகை வைக்கப்பட்டிருந்தது.
Click the link above to read the full article on the original website.


