சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 33 நாட்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் நடைபெற்று வரும் குளறுபடிகளால் அங்குள்ள விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 33 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், அதனால் நெல் கொள்முதல் நிலையங்களின் முன் விவசாயிகள் இரவும், பகலும் காத்துக்கிடக்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விவசாயிகளுக்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் துரோகம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
Click the link above to read the full article on the original website.


