பாட்னா: “பிஹாரில் ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என ராகுல் காந்தி பேரணிகளை நடத்துகிறார். பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றும் வேலையை எங்கள் அரசு செய்யும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சாத் திருவிழா தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்குவதால் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. சாத் திருவிழாவுக்கு மத்தியில் பிஹாரின் ககாரியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, “சாத் என்ற மாபெரும் திருவிழா இன்று தொடங்கி இருக்கிறது. நமது தாய்மார்களும் சகோதரிகளும் சாத் பூஜையை தொடங்கி இருக்கின்றனர்.
Click the link above to read the full article on the original website.


