சோன்பர்சா (பிஹார்): பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹாரில் முதல்கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சோன்பர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா, மாநிலத்தில் மகா கூட்டணி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.


