சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் குறித்தும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (21.10.2025) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
Click the link above to read the full article on the original website.


