புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தார்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளது டெல்லி யூனியன் பிரதேச அரசு.
“டெல்லியில் அரங்கேறிய துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. இதில் தங்களது உறவுகளை பிரிந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை டெல்லி அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டெல்லி அரசு நிற்கும். இந்த நேரத்தில் உடனடியாக நிவாரணம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
Click the link above to read the full article on the original website.


