கோவை: “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: ”தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நிதி அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தபடுகிறது. அந்த சங்கத்தின் தலைவர் விக்கிரம ராஜாவின் மகன் திமுக எம்எல்ஏ-வாக உள்ளார். இன்றைய சூழலில் திமுக மீது மக்கள் மத்தியில் வெறுப்பு நிலவுகிறது. சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு ள்ளன.
Click the link above to read the full article on the original website.


