சஹர்சா(பிஹார்): "வளர்ச்சிக்கான அடையாளமாக விளங்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதேநேரத்தில், அழிவுக்கான அடையாளமாக விளங்குவது ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சஹர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “இந்த தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் பல மகன்களும் மகள்களும் எனக்கு இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களித்தபோது, என் வாக்கு வீணாகக் கூடாது என விரும்பினேன். அதில் நான் வெற்றி பெற்றது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது நீங்கள் அளிக்கும் முதல் வாக்கு அரசாங்கத்தை உருவாக்கும் வாக்குகளாக இருக்க வேண்டும். உங்கள் வாக்கு என்டிஏ அரசாங்கத்தை வலுப்படுத்தும்.
Click the link above to read the full article on the original website.


