ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவிமரியாதை செலுத்தினார். பின்னர்,தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்ட அவர், தேவரின் பூஜை அறையில் 5 நிமிடம் தியானம் செய்தார். நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனிடம் நலம் விசாரித்தார். அதிமுக எம்.பி.தர்மர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் முரளிதரன் உடன் இருந்தனர்.
Click the link above to read the full article on the original website.


