ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்குப் பின்னால் நின்ற 11 எம்எல்ஏ-க்களில் வாசுதேவநல்லூர் அ.மனோகரனும் ஒருவர். கடந்த 2021 தேர்தலிலும் மனோகரனை வாசுதேவநல்லூரில் நிற்கவைத்தது அதிமுக. ஆனால், மதிமுக வேட்பாளர் சதர்ன் திருமலைக்குமாரிடம் தோற்றுப் போனார். இப்போது வரை தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராகவே காட்டிக்கொள்ளும் மனோகரன் போட்டியிட்ட தொகுதியில் இந்த முறை அவரது அண்ணன் ஆனந்தன் அய்யாசாமி தாமரை சின்னத்தில் போட்டியிட தடபுடலாக தயாராகி வருகிறார்.
இன்டெல் நிறுவனத்தின் பொறியியல் இயக்குநராக பணியாற்றிய ஆனந்தன் அய்யாசாமி, அண்ணாமலைக்கு அணுக்கத் தோழர். தற்போது தென்காசி மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் இவருக்குத்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் தென்காசி சீட் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், கூட்டணித் தோழரான ஜான் பாண்டியனுக்கு தென்காசியை விட்டுத்தர வேண்டிய சூழல் வந்ததால் ஆனந்தனின் தென்காசி கனவு கைகூடவில்லை.
Click the link above to read the full article on the original website.


