பிரியமானவர்கள் தீபாவளிக்கு பரிசு கொடுத்தால் யாராக இருந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், தேர்தலைக் கணக்கு வைத்து தீபாவளிக்காக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் அனைத்துக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பிவைத்த ஆளுயர ஃபிரிட்ஜ்கள் புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
புதுச்சேரியில் முதல்வர் தொடங்கி நியமன உறுப்பினர்கள் உள்ளிட்ட 33 எம்எல்ஏ-க்களும் தீபாவளிக்கு தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு அரசு செலவிலேயே ஸ்வீட் பாக்ஸ்களையும் பட்டாசுகளையும் அனுப்பிவைப்பார்கள். ஆனால் இந்த முறை, மத்திய நிதி அமைச்சக செலவுத் துறையானது, பொது நிதியிலிருந்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது என பிரேக் போட்டுவிட்டது. அதனால் ஆளுநர் கைலாஷ்நாதனும் இந்த முறை தீபாவளி பரிசுக்கான செலவுகளுக்கு அனுமதி தரவில்லை.
Click the link above to read the full article on the original website.


