தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்: தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் 1,500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேவேளையில், நெல் கொள்முதலை விரைவுபடுத்தாததைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றொரு புறம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


