In October, foreign investors invested Rs. 14,610 crore in the Indian stock market.

மும்பை: அன்​னிய முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து மூன்று மாதங்​களாக ரூ.77,000 கோடி மதிப்​பிலான முதலீட்டை இந்​திய பங்​குச் சந்​தையி​லிருந்து திரும்ப பெற்ற நிலை​யில், கடந்த அக்​டோபரில் ரூ.14,610 கோடியை அவர்​கள் முதலீடு செய்​துள்​ளனர். பாரின் போர்ட்​போலியோ இன்​வெஸ்​டார் (எப்​பிஐ) எனும் அன்​னிய முதலீட்​டாளர்​கள் பல்​வேறு காரணங்​களால் இந்​திய பங்​குச் சந்​தை​யில் இருந்து கடந்த மூன்று மாதங்​களாக கணிச​மான அளவில் முதலீட்டை திரும்ப பெற்​றனர்.

அதன்​படி, ஜூலை​யில் ரூ.17,700 கோடி, ஆகஸ்​டில் ரூ.34,990 கோடி, செப்​டம்​பரில் ரூ.23,885 கோடி என ரூ.77,000 கோடி மதிப்​பிலான தொகையை எப்​பிஐ வெளியே எடுத்​தனர். இந்த நிலை​யில், கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் செயல்​பாடு ஊக்​கம்​பெற்று வரு​வாய் அதி​கரிப்பு, அமெரிக்க மத்​திய வங்கி வட்டி விகித குறைப்பு எதிர்​பார்ப்பு மற்​றும் அமெரிக்​கா-இந்​தியா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​படிக்கை கையெழுத்​தாகும் என்ற நம்​பிக்கை ஆகியவை வெளி​நாட்டு முதலீட்​டாளர்​களின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Rahul Gandhi fishing with local people amidst election work in Bihar.

South Africa ‘A’ Test Match: India ‘A’ Team’s Outstanding Victory!