பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற கணிதப் பேராசிரியர் கே.சி. சின்ஹா (70) பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் பாட்னாவின் கும்ராஹர் தொகுதியில் சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புகழ்பெற்ற கணிதப் பேராசிரியரான சின்ஹா, அல்ஜீப்ரா, கால்குலஸ், டிரிக்னாமெட்ரி, வெக்டர் ஜியோமெட்ரி உட்பட 70-க்கும் மேற்பட்ட கணித நூல்களை எழுதி உள்ளார். பிஹார் மாநிலம் கைமுர் மாவட்டம் பேயுர் கிராமத்தில் பிறந்த சின்ஹா, சிறு வயதிலிருந்தே படிப்பில் சிறந்து விளங்கினார். பள்ளிப்படிப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர், பல்கலைக்கழக அளவிலும் முதலிடம் பிடித்தார்.
Click the link above to read the full article on the original website.


