பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் 15 பேர் மீது பெங்களூரு 64-வது அமர்வு நீதிமன்றம் இன்று கொலை, குற்றவியல் சதி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டதால், இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Click the link above to read the full article on the original website.


