சென்னை: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆய்வு செய்தார்.
கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அன்று முதல் 3 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
Click the link above to read the full article on the original website.


