Gas tanker lorry owners’ association strike: Risk of gas shortage in 5 states

நாமக்கல்: கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியத அடுத்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேசன் (பிபிசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் ரேசன் (ஃஹெச்பிசி) ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Debate arena: How is the Corona lockdown?

Contract worth Rs. 41,550 crore signed to purchase Marlet missiles: Signed in the presence of UK Prime Minister Keir Starmer and Modi.