புதுடெல்லி: டெல்லியில் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் மீண்டும் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்பியல் கோளாறு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து துவாரகாவின் எச்சிஎம்சிடி மணிப்பால் மருத்துவமனையில் கீதாவை சேர்த்தனர். அங்கு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து வென்டிலேட்டர் போன்ற உயிர்க் காக்கும் கருவிகள் உதவியுடன் கீதாவை வைத்திருக்க அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. பின்னர் நவம்பர் 6-ம் தேதி இரவு கீதா உயிரிழந்தார்.
Click the link above to read the full article on the original website.


