சிவகங்கை: “திமுகவினர் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்காமல், சத்தியம் வாங்கி ஓட்டு கேட்கின்றனர்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் சீமான் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக வெற்றி பெறும் என்று எப்படி கூற முடியும் ? அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்தப் பிரிவும், குழப்பமும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறதே, அது கட்சியாக உங்களுக்கு தெரியவில்லையா? திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு, நாடாக இருக்காது; சுடுகாடாகத் தான் இருக்கும்.
Click the link above to read the full article on the original website.


