தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய்களுடன் அமைந்திருந்த ஒழுகற்ற வட்ட வடிவ குளங்களில் செயற்கையாக சீதோஷண நிலைகளை ஏற்படுத்தி முத்துக்களை பாண்டியர்கள் வளர்த்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் பனையூர் அணைக்கட்டு பகுதியில் 10.09.2025 அன்று மேற்கொண்ட கள ஆய்வுகளில் மிக அதிக அளவிலான கடல் சிப்பிகளின் எச்சங்கள் படிமங்களாகவும், மிக மிக பழமையான மணல் கற்களால் கட்டமைக்கப்பட்ட சுவற்றினையும், மதகில் காணப்பட்ட ராமாயண நிகழ்வு குறித்த சிற்பத்தையும், சுவர்களில் காணப்பட்ட மிக மிக தொன்மையான எழுத்து குறியீடுகளையும் கண்டறிந்தோம்.
Click the link above to read the full article on the original website.


