சென்னை: பருவமழைக்கு முன்னதாக நெல்லை கொள்முதல் செய்யாததால், டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில், 40 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


