Couple arrested for running over delivery worker with car in Bengaluru: Caught on CCTV footage

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள புட்​டனஹள்​ளியை சேர்ந்​தவர் தர்​ஷன் (24). உணவு டெலிவரி ஊழிய​ரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்​பர் வருண் குமாருடன் புட்​டனஹள்ளி பிர​தான சாலை​யில் சென்று கொண்​டிருந்​தார்.

அவரது இரு சக்கர வாக​னம் சாலை​யின் எதிர்ப்​புறத்​தில் வந்த காரின் மீது மோதி​யது. இதனால் கார் உரிமை​யாளர் மனோஜ் குமார் (34), அவரது மனைவி ஆர்த்தி ஷர்மா (30) ஆகிய இரு​வரும் சத்​தம் போட்​டுள்​ளனர். இதனால் அச்​சமடைந்த தர்​ஷன், அங்​கிருந்து தப்​பியோடிய​தால் மனோஜ் குமாரும், ஆர்த்தி ஷர்​மா​வும் காரை யூ டர்ன் செய்து கொண்​டு, 2 கி.மீ. துரத்தி சென்று தர்​ஷனின் இரு சக்கர வாக​னத்​தின் மீது காரை ஏற்​றினர். இதில் பலத்த காயமடைந்த தர்​ஷன் சம்பவ இடத்​திலே உயி​ரிழந்​தார். வருண் குமார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

புட்​டனஹள்ளி போக்​கு​வரத்து போலீ​ஸார் அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் விபத்தை ஏற்​படுத்​தி​விட்டு தப்பிச் சென்​ற​தாக வழக்​குப் பதிவு செய்தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Prime Minister said that DMK members are harassing the people of Bihar – Stalin responds to Annamalai.

Marxist criticizes Indian Communist for deception: Senior Congress leader comments