கோவை: இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ”இருமல் என்பது குழந்தைகளில் அடிக்கடி காணப்படும் ஒரு அறிகுறியாகும். குறிப்பாக குளிர் காலங்களில் அதிகம் தோன்றும். பெரும்பாலான இருமல்கள் சுயமாக குணமடையும். சில இருமல், வைரஸ் காய்ச்சல்கள், அலர்ஜி, ஆஸ்துமா காரணங்களால் ஏற்படுகின்றன. அவ்வாறாக அலர்ஜி அல்லது ஆஸ்துமா காரணமாக இருமல் இருந்தால், ‘ஆன்டிஹிஸ்டமின்’ மருந்துகள் அல்லது சுவாசக் கருவி மூலம் சிகிச்சை வழங்கலாம்.
Click the link above to read the full article on the original website.


