சென்னை: மதுரவாயலில் உள்ள பூங்கா மற்றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.
எதிர் முனையில் பேசிய நபர், “மதுரவாயல் பல்லவன் நகரில் உள்ள பூங்கா மற்றும் அதன் அருகில் உள்ள கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடிக்கும்'' எனக் கூறி இணைப்பைத் துண்டித்தார். காவல் கட்டுப்பாட்டறை போலீஸார் உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


