திருச்சி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தாமதம் ஆனதால், அங்கு விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. அத்துடன், பாதிக்கப்படாத நெல்மணிகளின் ஈரப்பத அளவும் அதிகரித்து விட்டது.
எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் நேற்றும், இன்றும் (அக்.25, 26) ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய உணவுத் துறை அனுப்பியுள்ளது.
Click the link above to read the full article on the original website.


