பாட்னா: "பிஹார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள்" என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “இன்று தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள். பிரதமராக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, எங்கள் அரசாங்கம் 17 மாதங்களாக வழங்கிய இடஒதுக்கீட்டைப் பற்றி யாரும் பேசவில்லை. மக்களின் 65% இடஒதுக்கீட்டை பிரதமர் தின்றுவிட்டார். அவர்கள் பிஹாருக்கு என்ன கொடுத்தார்கள், குஜராத்துக்கு என்ன கொடுத்தார்கள் என்பது பற்றி பேச வேண்டும்” என்று கூறினார்.
Click the link above to read the full article on the original website.


