Bihar Exit Poll Results 2025: NDA likely to form the government again!

பாட்னா: பிஹாரில் பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ 140+ இடங்களையும், மெகா கூட்டணி 90+ இடங்களையும் வசப்படுத்தக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. வரும் 14-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளன. முதற்கட்டத் தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவான நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 67.14% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடையும் வரை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“Miracles happening in Bihar…” – Tejashwi Yadav optimistic about the increase in voter turnout

Disabled people stage a sit-in protest in Chennai demanding an increase in assistance allowance