பாட்னா: பிஹாரில் பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ 140+ இடங்களையும், மெகா கூட்டணி 90+ இடங்களையும் வசப்படுத்தக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. வரும் 14-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளன. முதற்கட்டத் தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவான நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 67.14% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடையும் வரை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
Click the link above to read the full article on the original website.


